உலகம்

அமெரிக்க மற்றும் சுவிஸ் ஜனாதிபதிக்கு இடையில் பேச்சுவார்த்தை!

சுவிட்சர்லாந்து ஜனாதிபதி காரின் கேல்லர்-சுட்டர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இறக்குமதி வரிகள் குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

இந்த உரையாடல் குறித்து ஏப்ரல் 10ஆம் திகதி , அன்று தகவல் வெளியிடப்பட்டது. கேல்லர்-சுட்டர் தனது X தள பக்கத்தில் (ட்விட்டர்) பக்கத்தில், “சுவிஸ் நாட்டின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் அமெரிக்காவின் கவலைகளை தீர்க்கும் வழிகளை” தாம் பகிர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், அமெரிக்கா சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் பொருட்களுக்கு 31% இறக்குமதி வரி விதித்தது. தற்போது, அந்த உயர் வரிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

இது சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா இடையிலான தொடர்ந்த பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கிறது. மிகவும் விரைவில் ஒரு தீர்வை உருவாக்க உற்சாகமாக உள்ளேன்” என கேல்லர்-சட்டர் கூறியுள்ளார். சுவிஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையில் பேச்சுவார்த்தைஇருப்பினும்,  ஒப்பந்தத்தின் அம்சங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்து அவர் எந்தவொரு விவரத்தையும் வெளியிடவில்லை.

What's your reaction?

Related Posts

 பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் சிக்கித் தவித்த இரண்டு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் திரும்பி வந்துள்ளனர். எனினும், அவர்கள் இருவரும் தங்களின்…