இலங்கை

கார் விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழப்பு!

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய – அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்று 15ஆம் திகதி  அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடையில் இருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த வேன் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி, பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆண் ஒருவர், இரு பெண்கள் மற்றும் 3 சிறுமிகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி குருந்துவத்த, பிடிகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

6 அரசியல் கட்சிகளும் 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல்!

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக திங்களன்று 6 அரசியல் கட்சிகளும், 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கம்பஹா, களுத்துறை, கிளிநொச்சி, குருணாகல், பதுளை மற்றும் இரத்திரனபுரி மாவட்டங்களில் 6 அரசியல்…