உலகம்

கோப்பிக்கு திண்டாடும் அமெரிக்க மக்கள்!

அமெரிக்க கடைகளில் கோப்பி விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கை காரணமாக ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் கோப்பி இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கோப்பி இறக்குமதிக்காக ஆண்டுதோறும் அமெரிக்கா சுமார் நூறு பில்லியன் டொலர்களை செலவிடுகிறது. இதில் அதிக அளவான கோப்பி பிரேசில் மற்றும் கொலம்பியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அமெரிக்க சந்தையில் காபியின் விலை சுமார் மூன்று டொலர்கள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி பல நாடுகள் மீது விதித்த வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்க சந்தையில் அனைத்து நுகர்வோர் பொருட்களின் விலைகளும் ஏற்கனவே அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

What's your reaction?

Related Posts

 பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் சிக்கித் தவித்த இரண்டு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் திரும்பி வந்துள்ளனர். எனினும், அவர்கள் இருவரும் தங்களின்…