No products in the cart.
சட்டவிரோத பொருட்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது!
இலங்கை கடற்படை மார்ச் 25ஆம் திகதி முதல் ஏப்ரல் 7ஆம் திகதி 2025 வரை தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 நபர்களை கைது செய்துள்ளது.
இலங்கை கடற்படை, கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து பாலமின்மடு, வான்கலே, மண்டைதீவு, இறக்கண்டி, உள்ளங்காளி குளம், ஊறணிக் குளம், கடைக்காடு, சுண்டிக்குளம், நவக்காடு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இந்த குழுக்களை கைது செய்துள்ளனர்.
இக் குழு சட்டவிரோத இரவு நேர டைவிங், வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி விலாங்கு மீன்களை மீன்பிடித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
இந்த நபர்களுடன் 45 சட்டவிரோத வலைகள், 50,005 கடல் அட்டைகள், வெடிபொருட்கள் மற்றும் ஏராளமான டைவிங் உபகரணங்கள் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைத்துள்ளனர்.