இலங்கை

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

நடப்பாண்டில் ஏப்ரல் 1 முதல் 9 வரை இலங்கைக்கு 56,567 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது நாட்டின் சுற்றுலா துறையின் வளர்ச்சியை குறிக்கின்றது. இலங்கையில் தினசரி வருகை 5,634 முதல் 6,934 வரை இருந்தது, ஏப்ரல் 5 அன்று அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. 

ஜனவரி முதல் ஏப்ரல் 9 வரை, இலங்கை 7,78,843 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், மார்ச் 2025க்கான சுற்றுலா வருவாய் 354 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 104.8 பில்லியன்) எட்டியுள்ளது. இது முந்தைய மாதத்தை விட 4.6% அதிகரிப்பையும், ஆண்டுக்கு ஆண்டு ரூபாய் அடிப்படையில் 4.6% அதிகரிப்பையும் பிரதிபலிக்கிறது. 

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த வருவாய் இப்போது 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 9.4% அதிகமாகுமென குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

6 அரசியல் கட்சிகளும் 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல்!

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக திங்களன்று 6 அரசியல் கட்சிகளும், 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கம்பஹா, களுத்துறை, கிளிநொச்சி, குருணாகல், பதுளை மற்றும் இரத்திரனபுரி மாவட்டங்களில் 6 அரசியல்…