கனடிய பிரதமருக்கும் மாகாண முதல்வர்களுக்கும் சந்திப்பு!

கனடிய பிரதமர் மார்க் கார்னி இன்று ஒட்டாவாவில் கனடாவின் மாகாண முதல்வர்களுடன் சந்திப்பு நடத்துகின்றார். 

மாகாணங்கள் சீனா மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரிகளால் பாதிக்கப்படும் விவகாரங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.

இந்த சந்திப்பு, கார்னி பொதுத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெறுகிறது.

இதனால், கனடாவில் ஏப்ரல் 28 ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்திப்பு கனடாவை ஒரே பொருளாதாரமாக உருவாக்குவது குறித்து பேச ஒரு வாய்ப்பாக இருக்கும் என அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, 13 தனித்தனி பொருளாதார அமைப்புகள் உள்ளன.

முக்கியமாக சீனாவின் கனடிய கனோலா எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் மீதான வரிகள் குறித்து பேச விரும்புவதாக சாஸ்காச்சுவான் மாகாண முதல்வர் ஸ்காட் மோ தெரிவித்துள்ளார். 

Exit mobile version