இத்திட்டம் தற்போது வணிக தொழில்முனைவோருக்கு கனடாவுக்கு வருவதற்கு ஒரே வழியாக உள்ளது. ஆனால், வங்கிகள் பணி அனுமதியில் உள்ளவர்களுக்கு நிதியுதவி வழங்குவதில் தயக்கம் காட்டுவதாக க்ரீன் கூறியுள்ளார்.
2013 இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 900-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, 3,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் நிரந்தர குடியுரிமை அனுமதிகளை பெற்றுள்ளனர்.
ஆனால், 42,200 விண்ணப்பங்களில் 16,370 விண்ணப்பங்கள் 24 மாதங்களுக்கு மேலாக இறுதியாகப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.