BYD வாகனம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட விடயம்

இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் வங்கி உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க இணக்கம் வௌியிடப்பட்ட BYD வாகனங்களின் இயந்திரத் திறனைத் மதிப்பிடுவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அடுத்த சில வாரங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சட்டமா அதிபர் இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். 

தங்களால் இறக்குமதி செய்யப்பட்ட BYD வாகனங்களை இலங்கை சுங்கம் தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக ஜோன் கீல்ஸ் CG நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Exit mobile version