கரூர் சம்பவம் தொடர்பில் விஜய் கைது செய்யப்படுகிறாரா ?

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய அரசியல் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அந்த வகையில், புஸ்ஸி ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது கரூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
இதேவேளை கட்சியின் தலைவர் விஜய் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 

முன்னதாக த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என சென்னை மேல் நீதிமன்றம் கூறியிருந்தது. 
இந்தநிலையில் தான் கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 39 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இதனால் விஜய் உட்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
கூட்டத்திற்கு விஜய் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமையினால் அங்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தமையினால் நெரிசல் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. 

உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கவுள்ளதாக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். 
அத்துடன் காயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாவை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில் என் மனம் படுகின்ற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை எனவும் விஜய் இன்று வௌியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Exit mobile version