இளங்குமரனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள்!

பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் மரக்கறிச் சந்தையை நவீன சந்தைத் தொகுதியில் இடமாற்றம் செய்து தருமாறு இன்று (24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

குறித்த சந்தைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுடன் வியாபாரிகள் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர். 

நிலமைகளை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் கலந்தாலோசித்து நல்ல முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version