இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 4வது தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவுக்கு சிறந்த ஆண் தடகள வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
நேற்று (26) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றார்.
அவர் 84.29 மீட்டர் தூரம் எறிந்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்.
