ஹெரோயினுடன் கைதான அதிபருக்கு தடுப்பு காவல்

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்காக தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர் இன்று (06) பிற்பகல் அனுராதபுரம் பொலிஸாரால் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அநுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்திற்கு நீதிமன்றம் இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

Exit mobile version