பாராளுமன்ற அமர்வு இடைநடுவே ஒத்திவைப்பு

பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் ஒத்திவைக்கப்படவிருந்த நிலையில், தற்போது இடைநடுவிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 09.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

…………….

பாராளுமன்றம் ஆரம்பமானதைத் தொடர்ந்து இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, இன்றைய தினத்திற்குரிய செலவுத் தலைப்புகள் நண்பகல் 12.30 மணியளவில் நிறைவேற்றப்படவுள்ளன. 

இதனைத் தொடர்ந்து, பாராளுமன்றம் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 9.00 மணி வரை ஒத்திவைக்கப்படும் என்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (01) பாராளுமன்றத்தில் அறிவித்தார்

Exit mobile version