துப்பாக்கி இயங்கியதால் பொலிஸ் சார்ஜன்ட் காயம்

மாலபே பொலிஸ் நிலையத்திற்குள் திடீரென துப்பாக்கி ஒன்று இயங்கியதால் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்துள்ளார். 

இன்று (7) காலை துப்பாக்கி ஒன்றை பரிசோதிக்க முற்பட்டபோது, அது தவறுதலாக இயங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காயமடைந்த பொலிஸ் அதிகாரியின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

மாலபே பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version