உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று!

மதுரை​யில் அவனி​யாபுரம், பாலமேடு ஜல்​லிக்​கட்டு நிறைவடைந்த நிலை​யில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, நடைபெறுகிறது. 

இதற்காக அலங்காநல்லூரில் கடந்த ஒருமாதமாக ஏற்பாடுகள் நடந்தன. வாடிவாசல், பார்வையாளர்கள் கேலரி, பாதுகாப்பு வசதிகள் போன்றவை செய்யப்பட்டு உள்ளன. 

அலங்காநல்லூரில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக இன்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் மதுரை வருகிறார். அவருக்கு வரவேற்பு அளிக்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

இதில் பங்​கேற்க தமிழகம் முழு​வதும் இருந்து 6,500 காளை​கள் பதிவு செய்​யப்​பட்​டிருந்​தன. அதில் சிறந்த 1,100 காளை​களுக்கு போட்​டி​யில் பங்​கேற்க டோக்​கன் வழங்​கப்​பட்​டுள்​ளது. 600 மாடு​பிடி வீரர்​கள் களம் இறங்​கு​கின்​றனர். 

போட்​டி​யில் அதிக காளை​களை அடக்​கும் சிறந்த வீரருக்கு சுமார் ரூ.20 லட்​சம் மதிப்​புள்ள சொகுசு காரும், சிறந்த காளை​யின் உரிமை​யாள​ருக்கு டிராக்​டரும் பரி​சாக வழங்​கப்​படு​கிறது. 2-ம் பரிசு பெறும் மாடு​பிடி வீரர், காளை​களுக்கு பைக்​கு​களும் பரி​சாக வழங்​கப்பட உள்​ளன. 

இதைப் பார்ப்​ப​தற்​காக உலகின் பல்​வேறு பகு​தி​களைச் சேர்ந்த சுற்​றுலாப் பயணி​கள், தமிழ்​நாடு சுற்​றுலாத் துறை மூலம் பதிவு செய்​துள்​ளனர். 

தென் மண்டல ஐ.ஜி. மற்​றும் மதுரை காவல் கண்​காணிப்​பாளர் தலை​மை​யில் 3 ஆயிரத்​திற்​கும் மேற்​பட்ட பொலிஸார் பாது​காப்​புப் பணி​களில் ஈடு​படு​கின்​றனர்.

Exit mobile version