அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்!

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் இராஜதந்திர தளம் ஒன்றின் மீது நேற்று (17) மீண்டும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று அதிகாலை நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தைக் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றிய ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, அங்கு அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதுடன், தூதரக வளாகத்திற்கு அருகில் பலத்த வெடிப்புச் சத்தமும் கேட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version