ஈரானுக்கு 48 மணிநேர ‘டெட்லைன்’ கொடுத்த ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

தனது ‘Truth Social’ சமூக வலைதளத்தில் பதிவொன்றை இட்டே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அந்தப் பதிவை இட்ட நேரத்திலிருந்தே இந்த 48 மணிநேரக் காலக்கெடு ஆரம்பமாவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மார்ச் 21 ஆம் திகதி GMT நேரப்படி 23:44 மணிக்கு இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். 

இதன்படி, எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி GMT 23:44 மணி வரை ஈரானுக்கு இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version