பாகிஸ்தானின் குண்டுவெடிப்பு

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுவெடிப்பில்,  3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரில் வந்த நபர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புக்குப் பின்னர் உடனடியாக துப்பாக்கிச் சூடும் நடந்தப்பட்டுள்ளது. இதனால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், இந்த சம்பவத்தால் குறித்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version