திருகோணமலை கப்பல் துறை பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
வான் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த எஸ். நிரோஜன் (36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவருடன் பயணித்த ஜீவராணி (47) என்பவர் கையில் கடுமையான காயம் ஏற்பட்டு, தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
