இந்திய துணை ஜனாதிபதியுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்: வலுசக்தி உள்ளிட்ட பல்துறைகளில் இணக்கம்

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் நேற்று(19.04.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்திய உப ஜனாதிபதியை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அன்புடன் வரவேற்றுள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும் என்பதால், தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான விருந்தோம்பலுக்குத் துணை ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Exit mobile version