சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தது அரசாங்கம்

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்காக உலகளாவிய அளவில் விருப்பங்களை வெளிப்படுத்தும் ஆவணங்களை (Expression of Interest) சமர்ப்பிக்குமாறு அதிகாரப்பூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம் விமான நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version