ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற போது, ஹார்டலோட் (Hardelot) கடற்கரைக்கு அருகில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்தனர்.
சுமார் 82 பேரை ஏற்றிச் சென்ற சிறிய படகு சிக்கலில் சிக்கியதால் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இந்த விபத்தில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 16 மற்றும் சுமார் 25 வயதுடைய பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகு இயந்திரக் கோளாறால் கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் படகுக்குள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். மொத்தம் 65 பேர் மீட்கப்பட்டனர். இதில் 3 பேர் மிகக் கடுமையான நிலையில் உள்ளனர்.
அவர்கள் எரிபொருள் மற்றும் கடல் நீர் கலவையால் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 14 பேர் தீக்காயங்களும் உடல் வெப்பக் குறைபாடும் காரணமாக சிகிச்சை பெற்றனர், இதில் சிலர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
