ஈரான் – இஸ்ரேல் பதற்றம் ; புதிய சர்ச்சை தகவல்கள் வெளியீடு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்திருந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டுடன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சூழலில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு எதிராக ஈரானில் கடுமையான அரசியல் மற்றும் இராணுவ விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் சில அரசியல் வட்டாரங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு பதிலடி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளதாகவும், அதனைத் தொடர்புபடுத்தி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version