வரலாற்றிலேயே மிகப்பெரிய இந்திய தூதுக்குழு கனடா விஜயம்!

இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வர்த்தக தூதுக்குழு இந்த வாரம் கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறது.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான இந்த தூதுக்குழுவில், சுரங்கம், எரிசக்தி, வாகன உற்பத்தி மற்றும் விண்வெளித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மூத்த வணிகப் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.

திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை இந்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனிந்தர் சித்துவைக் கோயல் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான ‘விரிவான பொருளாதார மற்றும் கூட்டு ஒப்பந்தம்’ (CEPA) தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடரவுள்ளார்.

இந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த இரு நாடுகளும் உறுதியளித்துள்ளதாக இந்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version