ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை, பிரெக்சிட்டுடன் ஒப்பிட்டு எச்சரித்துள்ளார் கனடா பிரதமர்.
கனடாவிலிருந்து பிரிவது தொடர்பில் நடைபெறவிருக்கும் ஆல்பர்ட்டா பொது வாக்கெடுப்பை, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரெக்ஸிட் வாக்கெடுப்புடன் ஒப்பிட்டு, அது ஒரு ஆபத்தான விடயம் என விமர்சித்துள்ளார் கனடா பிரதமரான மார்க் கார்னி.
பிரெக்சிட் சமயத்தில் இங்கிலாந்து வங்கியை வழிநடத்தியவரான கார்னி, ’பிரெக்சிட் வாக்கெடுப்பு நடந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், மக்கள் எதற்கோ வாக்களிக்க, ஆனால், எதுவோ கிடைக்க, இப்போது அதை மாற்ற பிரித்தானியா முயற்சித்துக் கொண்டிருக்கிறது’ என்று கூறினார்.
