தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சூரியவெவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (28) இரவு விபத்தொன்று சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மூவர் எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலியில் டிப்பர் வாகனம் ஒன்று மோதியுள்ளதுடன், அதற்கு பின்னால் வந்த கொன்கரீட் கலவை இயந்திர வாகனமொன்று டிப்பர் வாகனத்தின் பின்புறத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
