சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 ஆம் மற்றும் 6 ஆம் தவணைக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியானது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
