எதிர்வரும் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் ஈரான் ரசிகர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் நோக்கில், தங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட் ஒதுக்கீட்டை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஈரான் கால்பந்து கூட்டமைப்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் தீவிர ராஜதந்திரப் போர் மற்றும் அண்மைய இராணுவ மோதல்களின் நிழலில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஈரான் கூட்டமைப்பு கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளது.
