இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோக மரணம்

வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் வயல் உழுதுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநர் துரதிர்ஷ்டவசமாக அதன் அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.

குறித்த ஓட்டுநர், கூலி அடிப்படையில் மற்றொருவருக்குச் சொந்தமான உழவு இயந்திரத்தில் வயல் உழும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வயல் உழுது முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, உழவு இயந்திரம் அதிக வேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து, வயல்களுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் அவர் அந்த உழவு இயந்திரத்தின் அடியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வனாதவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version