இறுதி டி-20 போட்டி – முதலில் துடுப்பாடும் இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பாடி வருகின்றது. 

முதல் 5 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் கமில் மிஷார ஆகியோர் துடுப்பாடி வருகின்றனர். 

முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டி மிகவும் தீர்மானமிக்க போட்டியாக அமைந்துள்ளது.

Exit mobile version