கனடாவில் பாதிக்கப்பட்டவரே குற்றவாளியான ஒரு வித்தியாசமான வழக்கு

கனடாவில், இளம்பெண்ணொருவர் கொல்லப்பட்ட வழக்கில், உண்மையில், குற்றம் சாட்டப்பட்டவர்தான் பாதிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார் அவரது சட்டத்தரணி.

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில், 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி கெய்ட்லின் ஜென்னிங்ஸ் (22) என்னும் இளம்பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து கெய்ட்லினை கொலை செய்ததாக, அவரது கணவரான டேவிட் யேட்ஸ் (52) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கெய்ட்லினை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டேவிட்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர் என்று வாதம் முன்வைத்துள்ளார் அவரது சட்டத்தரணியான கஸாண்ட்ரா டிமெலோ.

அதாவது, ஜென்னிங்ஸ் டேவிடை கடுமையாகத் தாக்குவதுண்டாம். அடிக்கடி அவரது கழுத்தை நெறித்து டேவிடை மூச்சுத்திணற வைப்பதுண்டாம் கெய்ட்லின்.

அதனால் பலமுறை டேவிட் சுயநினைவிழந்துள்ளாராம். அதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version