டொராண்டோவில் இரு வாகனங்கள் மோதி விபத்து

டொராண்டோவில் இரண்டு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய இரண்டு நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஸ்படைனா அவென்யூ மற்றும் டண்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் டொராண்டோ காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

விசாரணையில், விபத்துக்குள்ளான ஒரு வாகனத்தில் இருந்த இரண்டு ஆண்கள், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அங்கிருந்து கால்நடையாகத் தப்பி ஓடியுள்ளமை தெரியவந்துள்ளது.

தப்பியோடிய சந்தேக நபர்கள் குறித்த அடையாள விபரங்கள் எதையும் காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

விபத்துக்குள்ளான மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்தார். இந்த மோதலில் காயமடைந்த ஒருவர், உயிருக்கு ஆபத்தில்லாத சிறு காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவ்விபத்து குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால், அப்பகுதியில் தற்காலிகமாகச் சாலைகள் மூடப்பட்டுள்ளன.  

Exit mobile version