முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இன்று (3) மீண்டும் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று மீண்டும் அழைக்கப்படவுள்ளது.
அந்த வழக்கில் இன்று வரையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
