அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மூன்று சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, தங்கத்தின் விலை மேலும் சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரான் மீதான கடற்படை முற்றுகையை மீண்டும் அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையின் மதிய வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 78 டாலராக பதிவாகியிருந்தது.
