பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பாணத்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (29) அதிகாலை பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் வைத்து இவர் தனது T-56 ரகத் துப்பாக்கியால் இவ்வாறு சுட்டுக்கொண்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பாணத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் பேராதனைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version