மதுபோதையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்று இரு மிதிவண்டிப் பயணிகளைக் கொன்ற குற்றத்திற்காக 47 வயதான குல்தீப் சிங் கில் என்பவருக்குக் கனடா நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 13 அன்று வினிபெக்கில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 31 வயதான எகோர் போபோவ் மற்றும் அவரது துணைவியாரான 25 வயதான கெர்ரி பொன்னர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அவர்களின் 9 மாத பெண் குழந்தையை அனாதையாக்கியுள்ளது.
சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் கெனாஸ்டன் வீதியில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற குல்தீப், பாதசாரிகள் மற்றும் மிதிவண்டிப் பாதையில் புகுந்து தம்பதியினர் மீது மோதியுள்ளார்.
