வெப்பநிலை குறித்து வௌியான எச்சரிக்கை

வெப்பநிலை குறித்த முன்னெச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. 

இதன்படி கிழக்கு, வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (06) வெப்பத்தின் அளவு, மனித உடலால் உணரப்படும் அளவிற்கு “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கக்கூடும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

எனவே, அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version