இலங்கையில் இன்று 06 ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுகின்றது.
கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற கண்ணொருவ தாவர மரபணு வள மையத்தின் அபிவிருத்தி அதிகாரி திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிருஷாந்தி குமாரி தசநாயக்க 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கலகெதர மினிகமுவவில் வசிப்பவர் ஆவர்.
திடீரென உடல்நிலையில் எற்பட்ட சுகவீனம், சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.