யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதுகுறித்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் (Maradalingam Pradeepan) தலைமையில் நேற்றைய தினம் (20.05.2025) 10.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவேற்றி முடிக்க வேண்டிய தேவைப்பாடுகளை வலியுறுத்தினார்.
மேலும், ஒப்பந்தகாரர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளின் முன்னேற்றத்தினை ஒவ்வொன்றாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார்.இக் கூட்டத்தினைத் தொடர்ந்து, அரசாங்க அதிபர் கடவுச்சீட்டு அலுவலகம் அமையவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளை நேரடியாக ஆய்வு செய்ததுடன், வேலைகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் பணிப்புரைகள் வழங்கப்பட்டது.
இக் கலந்துரையாடலிலும், நேரடியான களதரிசிப்பிலும், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) , க. ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் கே. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆ. சத்தியமூர்த்தி மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.