மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் நடைபெறும் பா.ம.க. மகளிர் மாநாட்டு பணிகளை ராமதாஸ் ஆய்வு செய்தார்.
இதன்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் ராமதாஸ் தெரிவித்தாவது, பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி வைக்கிறதோ அந்த அணி சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும். கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதில் தவறில்லை என்றார்.
இதனிடையே, அன்புமணி அப்பா பிள்ளையா? அம்மா பிள்ளையா? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு இரண்டும் என ராமதாஸ் பதில் அளித்தார்.