மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவைகளை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த சேவையாக வழங்குவதை பிரதான நோக்கமாக கொண்டு, முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் நிறுவப்படவுள்ள ஆரம்ப சுகாதா மையத் திட்டம் குறித்து பொது சுகாதார தாதியர் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பட்டறை நேற்று (26) இலங்கை அறக்கட்டளை கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் இடம்பெற்றது.
நாட்டல் சுமார் 10,000 மக்கள் தொகையை உள்ளடக்கிய ஒரு ஆரம்ப சுகாதார சேவை மையத்தை நிறுவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.