தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு அரசுக்கு சவாலாக உள்ளது

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நானுஓயா ரயில் நிலையத்தின் கள விஜயத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தோட்டத் தொழில்கள் அமைச்சகமும் நிதி அமைச்சகமும் இது தொடர்பாக தொடர்ந்து தலையிட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், எதிர்காலத்தில் இலாபகரமான டிப்போக்களுக்கு போனஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

Exit mobile version