இந்தியா

கொழுக்கட்டைக்காக உயிரை மாய்த்த மாணவி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சக்தி நகர் இ.பி. சாலையில் வசிப்பவர் முனுசாமி. 

இவரது 14 வயதான மகள் மோகன பிரியா அரச பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். 

நேற்று முன்தினம் (29) மாலை மோகன பிரியா, தாயாரிடம் கொழுக்கட்டை செய்து தருமாறு கேட்டு அடம் பிடித்துள்ளார். 

அப்போது அவர் நாளைக்கு செய்து தருகிறேன் எனக் கூறியதாக தெரிகிறது. 

இதனால் மனமுடைந்த மாணவி திடீரென வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

உடனடியாக அவரை மீட்டு அரச பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக பெற்றோர் அனுமதித்த போதிலும் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி (6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை…