உலகம்

நேபாள பிரதமர் இராஜினாமா

நேபாளத்தில் இளைஞர்கள் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த நாட்டு பிரதமர் கே.பி சர்மா ஒலி இராஜினாமா செய்துள்ளார். 

அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்து போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 

26 சமூக வலைத்தளங்களுக்கு அந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 

ஜெனரல்-இசட் நடத்திய சமூக ஊடக ஆதரவு போராட்டம் ஊழல் எதிர்ப்புப் போராட்டமாக மாறியிருந்தது. 

இந்த சூழலில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சமூக ஊடகங்கள் மீதான தடையை திரும்பப் பெற்ற நிலையில், பரவலான ஊழல் காரணமாக போராட்டக்காரர்கள் அவரது இராஜினாமாவைக் கோரி வந்தனர். 

குறிப்பாக, பல்வேறு அமைச்சர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நேபாளத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அங்கு அமைச்சர்களின் குடும்பங்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் அதேவேளையில், சாதாரண நேபாள குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தக்கூட போராடுகிறார்கள் என இளைஞர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

போராட்டத்தில் ஏற்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் நேபாள பிரதமர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…