கிரிக்கட்விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் ஒருநாள் தொடருக்கான புதிய தலைவர் அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் தொடருக்கான புதிய தலைவராக வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி நியமிக்கபட்டுள்ளார். 

மொஹமட் ரிஸ்வான் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஷஹீன் அப்ரிடிக்கு புதிய தலைவர் பதவியை வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய தேர்வுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஷஹீன் அப்ரிடியின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது. 

இவர் ஏற்கனவே பாகிஸ்தான் இருபதுக்கு 20 அணியின் தலைவராக செயல்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

WTC 2025 இறுதிப்போட்டி – தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு இதோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது, இதில் அவுஸ்திரேலியா மற்றும் தென்…