உலகம்

நெடுஞ்சாலையில் விழுந்து நொருங்கிய விமானம்!

தெற்கு புளோரிடாவில் நடந்த விமான விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று 11ஆம் திகதி அமெரிக்க நேரப்படி காலை 11 மணிக்கு. இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வெளிநாட்டு அறிக்கைகளின்படி, விபத்துக்குள்ளானது இலகுரக விமானம் என தெரிவிக்கப்படுகிறது.

போகா ரேட்டனில் இருந்து டல்லாஹஸ்ஸி சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் போகா ரேட்டனில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விமான விபத்து நடந்த நேரத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த ஒரு வாகன ஓட்டி தப்பிக்க முயன்றபோது அருகிலுள்ள மரத்தில் மோதி காயமடைந்தார். இருப்பினும், அவரது நிலைமை மோசமாக இல்லை என்று கூறப்படுகிறது.

விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.  

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…