உலகம்

லெபனானில் போர் பதற்றம் தீவிரம் – 07 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு

லெபனானில் நிலவும் பதற்ற நிலையை உடனடியாக குறைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேல் வெளியிட்ட கட்டாய இடம்பெயர்வு உத்தரவுகளால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

லெபனானின் லிட்டானி நதிக்கு (Litani) தெற்குப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தற்போது போர் காரணமாக
பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகளை மேற்கோள்காட்டி ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stephane Dujarric) தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பெய்ரூட் (Beirut) நகரின் தெற்கு புறநகர்ப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

அதிர்ச்சி மற்றும் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும்
சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே லெபனான் அரசாங்கத்தின் தகவல்படி, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 7 இலட்சத்து 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…