கனடா

டொராண்டோவில் மனிதக் கடத்தல் கொடூரம்

டொராண்டோவில் 23 வயது இளம் பெண் ஒருவரைக் கடத்தி, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம் தொடர்பாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம், டொராண்டோ காவல்துறையின் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த அதிர்ச்சிப் பின்னணி குறித்த விசாரணையைத் தொடங்கினர்.

சந்தேகத்திற்குரிய அந்த இரு நபர்களும் ஏமாற்று வேலைகள், மிரட்டல்கள் மற்றும் தங்களது கட்டுப்பாட்டு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை மனிதக் கடத்தலுக்கு உள்ளாக்கியதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்குப் பாலியல் சேவைகளை வழங்குமாறு இந்த இரு நபர்களும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

பாலியல் தொழில் மூலம் அந்தப் பெண் சம்பாதித்த ஒட்டுமொத்தப் பணத்தையும் இந்தச் சந்தேக நபர்களே முழுமையாகப் பறித்துத் தங்க வைத்துக் கொண்டுள்ளனர்.

தொடர் விசாரணையின் பலனாக, கடந்த மே 22 திகதி டொராண்டோவில் உள்ள ஒரு குறிப்பிட்ட முகவரியில் அதிரடி சோதனை நடத்திய பொலிஸார் சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் ஆன இரு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் டொராண்டோவைச் சேர்ந்த கெய்லன் ரிச்சர்ட் வேர்ஹாம் மற்றும் அவா ஆஷௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவர் மீதும் பின்வரும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…