No products in the cart.
உரிய உரிமமின்றி நூற்றுக் கணக்கான விமானங்களை இயக்கிய கனடிய விமானி!
கனடாவின் டோரண்டோவில் உள்ள முன்னணி விமான நிறுவனம் ஒன்றின் முன்னாள் கேப்டன், தேவையான தகுதி விபரங்கள் மற்றும் உரிய உரிமம் இன்றி நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்கியுள்ளதாகப் பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘புராஜெக்ட் இகாரஸ்’ என்ற விசேட விசாரணை குறித்த முக்கிய விபரங்களை வெளியிடுவதற்காக இன்று காலை 11 மணிக்கு அவசர ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை ஒரு ‘சிக்கலான மோசடி’ விசாரணை எனப் பொலிஸார் விவரித்துள்ளனர்.














