உலகம்

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் பலி!

கிழக்கு பிரான்சின் டோம்ப்லைன் நகரில், ஸ்கைடைவர்ஸை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பதினொரு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விபத்தில் விமானி மற்றும் ஐந்து மாணவர்கள், ஐந்து பயிற்றுனர்கள் உட்பட 10 பயணிகள் உயிரிழந்தனர்.

பாராசூட் பயிற்சிப் பள்ளி ஒன்றால் பயன்படுத்தப்பட்டு வந்த அந்த விமானம், நான்சி-எஸ்ஸி விமானத்தளத்திலிருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெர்த்-எட்-மோசெல் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

பிரெஞ்சு போக்குவரத்து அமைச்சர் பிலிப் டபரோட், தானும் உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸும் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று வருவதாகவும், அதனை ஒரு “பயங்கரமான துயரம்” என்றும் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…